அசாமில் வெள்ள பாதிப்பு - 15 பேர் பலி

by Staff / 29-08-2023 12:15:16pm
அசாமில் வெள்ள பாதிப்பு - 15 பேர் பலி

அசாமில் பெய்து வரும் கனமழையால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மழை பாதிப்பின் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். 17 மாவட்டங்களில் வெள்ளத்தால் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். லக்கிம்பூர் மற்றும் தேமாஜி மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பெக்கி, ஜியா-பரலி, திசாங், டிகோவ் மற்றும் சுபன் சிரி ஆறுகள் அபாய அளவை தாண்டி பாய்ந்தோடுகிறது. சாலைகள், பாலங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதிகாரிகள் முழுவீச்சில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via