ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி

by Staff / 07-07-2023 11:50:35am
ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவதூறு வழக்கில் சிறைத்தண்டனைக்கு தடை கோரிய ராகுலின் மறுஆய்வு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி ஹேமந்த் பிரச்சக் முக்கிய தீர்ப்பை வழங்கினார். உயர்நீதிமன்றம் தண்டனைக்கு தடை விதிக்காததால் ராகுல் காந்தி மீதான தகுதி நீக்கம் தொடரும். ஏப்ரல் 13, 2019 அன்று நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​கர்நாடக மாநிலம் கோலாரில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் ராகுல் காந்தி தனது உரையில் மோடி சமூகத்தை அவமதித்ததாக வழக்கு தொடரப்பட்டது.  
 

Tags :

Share via