காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு. புதுமாப்பிள்ளை அறைக்கு தீ வைத்த அண்ணன்

by Staff / 08-07-2023 11:51:11am
காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு. புதுமாப்பிள்ளை அறைக்கு தீ வைத்த அண்ணன் குமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே உள்ள விராலிக்காட்டுவிளை கிராமத்தில் உள்ள ஒரு தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் அண்ணனுக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது.அண்ணனும், தம்பியும் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் தம்பி அதேபகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கவே, 2 வாரங்களுக்கு முன்பு அவர் காதலித்த பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.<br /> பிறகு மாலையும், கழுத்துமாக கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.பின்னர் வேர்க்கிளம்பி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காதல் ஜோடி தனியாக வசித்து வந்தது. இந்த காதல் திருமணத்தை வாலிபரின் அண்ணன் விரும்பவில்லை.அதே சமயத்தில் தம்பி தாயாரை பார்க்க சொந்த வீட்டுக்கு வந்து சென்றபடி இருந்துள்ளார். அந்த சமயத்தில் தம்பி அங்கு அண்ணன் வசிக்கும் அறையில் படுத்து தூங்குவாராம். இது அண்ணனுக்கு பிடிக்கவில்லை.இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த அண்ணன் திடீரென பெட்ரோல் ஊற்றி தம்பி தூங்கும் அறைக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது.இதுபற்றிய தகவல் அறிந்ததும் தக்கலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.திருவட்டார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

Tags :

Share via