ஜி. ஹெச்க்கு உடல் தானம் செய்வதாக எழுதி வைத்து டிரைவர் தற்கொலை

by Staff / 26-11-2023 03:10:17pm
ஜி. ஹெச்க்கு உடல் தானம் செய்வதாக எழுதி வைத்து டிரைவர் தற்கொலை

சேலம் பொன்னம்மாபேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (43) ஆட்டோ டிரைவர் இவரது மனைவி சங்கீதா கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பு உடல் நல குறைவால் காலமானார். சுரேஷ்குமாருக்கு கல்லூரி மற்றும் பிளஸ் டூ படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் சங்கீதாவின் தாய் தங்கம்மாள் வீட்டில் வசித்து வருகின்றனர். இதனிடையே சுரேஷ்குமார் அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று நீண்ட நேரம் ஆகியும் சுரேஷ் குமார் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது சுரேஷ் குமார் தூக்கில் சடலமாக தூங்கினார். இது பற்றிய தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ் குமார் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அதில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை உடல் நல குறைவால் அவதிப்படுவதால் தற்கொலை செய்து கொள்கிறேன் எனது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கி விடுங்கள் என எழுதி இருந்தார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via