கலவரத்தில் 9 பேர் பலி - அமைச்சர் சரமாரி கேள்வி

by Staff / 08-07-2023 05:34:56pm
கலவரத்தில் 9 பேர் பலி - அமைச்சர் சரமாரி கேள்வி மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் காலை முதல் வாக்குச் சாவடிகள் மீது தாக்குதல்களும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சிகளின் முகவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கொடூரமாக தாக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் ஷாஷி பஞ்சா, “பொதுமக்களை காப்பதில் மத்திய பாதுகாப்பு படை தோல்வி அடைந்தது. 65,000 மத்திய காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டது. அவர்கள் ஏன் கலவரத்தை கட்டுப்படுத்தவில்லை?” என தெரிவித்துள்ளார்.
 

Tags :

Share via