வந்தே பாரத் ரயில் உணவில் ஊழியர் நகம்
மும்பை- கோவா சிஎஸ்எம்டி- மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பயணி ஒருவருக்கு வழங்கிய உணவில் மனித விரல் நகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வீடியோ எடுத்த பயணி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட கேட்டரிங் ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஐஆர்டிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல முன்னதாக இதே வந்தே பாரத் ரயிலில் கடந்த ஜூன் 27ஆம் தேதி பயணம் செய்த பயணி ஒருவர், மதிய உணவில் ஆணிகள் இருந்ததாக புகார் எழுப்பினார்.
Tags :