மாணவர் கொலையில் மாணவர் உள்ளிட்ட 6 பேர் கைது.

by Editor / 07-03-2023 08:40:30am
மாணவர் கொலையில் மாணவர் உள்ளிட்ட 6 பேர் கைது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் மாசி மக தேர்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சியை பார்க்க வருகை தந்த கல்லூரி மாணவர் சுகந்திரன் என்பவருக்கும், மது போதையில் வந்த கல்லல் விநாயகர் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சுதந்திரன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொலை வழக்கில் 6 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.விபரம் வருமாறு:


1)மணி பிரகாஷ்(22)
த.பெ. ஆறுமுகம்,
இந்திரா நகர்,
கல்லல்

A2)பிரகாஷ்(22)
த.பெ.தமிழரசன்,
இந்திராநகர்,
கல்லல்.

3)சுபாஷ்(20),
த.பெ.சோமசுந்தரம், இந்திரா நகர்,
கல்லல்.
(இவர் திருப்பத்தூர் அப்சரா கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான்).
 
4)மணிகண்டன்(21), த.பெ.சின்னகருப்பன், தெற்கு மூன்றாவது விதி,
கல்லல்

5)சரவணன்(20),
த.பெ.ஆனந்தன், இந்திராநகர்,
கல்லல் 

6)சஞ்சய்(21), 
த.பெ.முனியாண்டி, பழைய கடைவீதி, கல்லல்

 

Tags : மாணவர் கொலையில் மாணவர் உள்ளிட்ட 6 பேர் கைது.

Share via