தீப்பிடித்து எரிந்த ஆழ்துளை கிணறு

by Staff / 15-07-2023 03:54:07pm
தீப்பிடித்து எரிந்த ஆழ்துளை கிணறு

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் இருந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ராஜோலு மண்டலம் சிவக்கோடு அக்வா குளம் அருகே பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். ஓஎன்ஜிசி எரிவாயு குழாய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் ஓஎன்ஜிசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via