16 லட்சத்தை ஏமாற்றிய இருவர் கைது
கோவை மாவட்டம் சவுரிபாளையம் மீனா எஸ்டேட்டைச் சேர்ந்தவர் 47 வயதான செந்தில் ஆனந்த், கட்டுமான தொழில் செய்து வருகிறார், இவருக்கு கோவையை சேர்ந்த 65 வயதான சுதாகர், அவரது நண்பர் புதுகோட்டையை சேர்ந்த 50 வயதான ராஜா, ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது, அவர்கள் செந்தில் ஆனந்திடம் எலக்ட்ரிக் வாகனம் சார்ஜர் செய்யும் கம்பெனியில் ரூ. 16 லட்சம் முதலீடு செய்தால், மாத வருமானமாக ரூ. 60 ஆயிரம் கிடைக்கும் என்று தெரிவித்தனர்,அதை உண்மை என நம்பியவர் ரூ. 16 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார், ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை தரவில்லை என்று தெரிகிறது, இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில் ஆனந்த் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டார், ஆனாலும் அவர்கள் பணத்தை திருப்பி தராமல் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்,இதையடுத்து செந்தில் ஆனந்த், பீளமேடு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் நேற்று, வழக்குப்பதிவு செய்து சுதாகர், ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :