மலேரியா காய்ச்சலுக்கு வட மாநில பெண் தொழிலாளி பலி

by Staff / 18-04-2024 01:15:28pm
மலேரியா காய்ச்சலுக்கு வட மாநில பெண் தொழிலாளி பலி

கேரளாவின் இடுக்கி நெடுங்கண்டத்தில் மலேரியாவால் பாதிக்கப்பட்ட வட மாநில பெண் தொழிலாளி உயிரிழந்தார். கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுமித்ரா என்பவர் உயிரிழந்தார். அவருக்கு 20 வயது. ஐந்து நாட்களுக்கு முன், சுமித்ரா, தன் கணவருடன், நெடுங்கண்டத்தில் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்கு வந்துள்ளார். காய்ச்சல் காரணமாக தூக்குபாலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மதியம் அனுமதிக்கப்பட்ட சுமித்ரா, நெடுங்கண்டம் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரவு உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பொது மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும்.சுமித்ராவின் கணவர் நிக்கோலஸுக்கும் மலேரியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு கொசுவலை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நெடுங்கண்டனம், குமுளி உள்ளிட்ட பகுதிகளில் ஏலத்தோட்ட வேலைக்காக, தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via