21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!

by Editor / 29-12-2023 09:41:37am
21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (வெள்ளிக்கிழமை) கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதே போல், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags : 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!

Share via