மது விற்ற இரண்டு பேர் கைது
கடம்பூர் அடுத்த கஞ்சனூர் சுசில்கரை சாலையில் செலுமித் தொட்டி அருகே கடம்பூர் போலீசார் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர்கள் கே. பி. மாளம் சுசில்கரை பகுதி சேர்ந்த ஜடையப்பன் என்பது மகன் ஜடசாமி வயது 21 நாகராஜ் 52 ஆகியோர் என்பதும் இவர்கள் கர்நாடகா அரசு மதுபான பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் வைத்து விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து 19 கர்நாடக மது பாக்கெட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது
Tags :