கடலில் பேனா சின்னம்: திரும்பப் பெறும் தமிழக அரசு

by Staff / 16-07-2023 01:11:03pm
கடலில் பேனா சின்னம்: திரும்பப் பெறும் தமிழக அரசு

சென்னை மெரினா கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இந்த திட்டத்திற்கு மீனவர் அமைப்பினர், நாம் தமிழர், அதிமுக, பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு திரும்ப பெற இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கருணாநிதி நினைவிட வளாகத்திலேயே பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via