குழந்தை உயிரிழப்பு - மருத்துவமனை விளக்கம்

by Staff / 06-08-2023 02:00:43pm
குழந்தை உயிரிழப்பு - மருத்துவமனை விளக்கம்

கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது குறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை தற்போது விளக்கம் அளித்துள்ளது. பாக்டீரியா தொற்றினால் ரத்தத்தில் நச்சுகள் கலந்து, வைட்டமின் குறைபாடு பாதிப்பால் குழந்தை இறந்ததாகவும், உயர்தர சிகிச்சைகள் அளித்தும் குழந்தையை காப்பாற்ற இயலவில்லை என்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை தெரிவித்துள்ளது. கை அகற்றப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததை அடுத்து, குழந்தையின் பெற்றோர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

 

Tags :

Share via