ரயில் நிலையத்தில் மிருகத்தனமாக முதியவரை தாக்கிய காவலர்

by Editor / 30-07-2022 12:00:30am
ரயில் நிலையத்தில் மிருகத்தனமாக முதியவரை தாக்கிய காவலர்

இதயமே நொறுங்கி போகும் அளவுக்கு,கனத்த இதயத்தோடு சமூக வலைத்தளத்தில் இன்று வேகமாக  ஒரு வீடியோ உலா வரத்தொடங்கியத்தை காணும் கொடூரம் நமக்கு ஏற்பட்டது.ஆமாங்க ரயில் நிலைய நடைமேடையில் வயதான ஒருவரை காவலர் ஒருவர் மிருகத்தனமாக தாக்கும் கொடூர சம்பவம் தான் வீடியோ காட்சிகளாக உலாவந்துகொண்டு இருக்கிறது.

காவலர் அடித்ததால்  வலி பொறுக்க முடியாமல், அந்த முதியவர் துடிக்கிறார்.. பிறகு, எழுந்திருக்க முயற்சிக்கும்போது, மறுபடியும் அவரை பூட்ஸ் காலால் உதைத்து கீழே தள்ளுகிறார்..மீண்டும் மீண்டும் நடக்கும் இந்த கொடூரத்திற்குபின்னர்  அந்த கான்ஸ்டபிள்.. 2, 3 முறை, முதியவர் எழுவதற்காக முயற்சித்தபோதெல்லாம், ஓங்கி ஓங்கி அடித்தே அவரை கீழே சாய்க்கிறார் கான்ஸ்டபிள்.. பிறகு, முதியவரின் கால்களைப் பிடித்து தரதரவென இழுத்து, ரயில்வே நடைமேடையிலிருந்து 
தண்டவாளத்தில்  முதியவரை கீழே தொங்கவிட்டபடி, அவரது முகத்தில் மறுபடியும் உதைக்கிறார்... இதை அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றனர்.. ஒருத்தரும் முன்வந்து போலீஸ்காரரை தடுக்கவில்லை.முதியவரை காப்பாற்றாவுமில்லை . ரயில் நிலையத்தில்  நின்று கொண்டிருந்த ரயிலுக்குள் இருந்த பயணி ஒருவர் இந்த காட்சியை வீடியோ எடுத்துவிட்டார்.. அதை சமூக மீடியாவிலும் பதிவிட்டுவிட்டார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து, அந்த கான்ஸ்டபிள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை கண்காணிப்பாளர் ரேவா தெரிவித்துள்ளார்.மேலும் இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ரயில் நிலையத்தில் மிருகத்தனமாக முதியவரை தாக்கிய காவலர்
 

Tags :

Share via