கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த துணை காவல் கண்காணிப்பாளரின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கபட்டது.

by Editor / 09-02-2022 12:12:18am
கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த துணை காவல் கண்காணிப்பாளரின் குடும்பத்திற்கு 25  லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கபட்டது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்டத்தில் கடந்த 14.09.2020 ல் துணை காவல் கண்காணிப்பாளராக தெய்வத்திரு. சுவாமிநாதன் அவர்கள் பணியில் இணைந்து கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக 02.06.2021 அன்று உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் மிகுந்த வேதனையையும் ஏற்படுத்தியது.இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த துணை காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன்குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து சிறப்பு நிவாரண நிதியான 25,00,000/- ரூபாய் காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்  துணைக் காவல் கண்காணிப்பாளரின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

 

Tags :

Share via