முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம் ராஜினாமா
தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்வதாக முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக தலைமை செயலாளராக பணியாற்றி கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ஓய்வுபெற்ற சண்முகம், ஓராண்டுக்கு தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :