தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

by Staff / 07-08-2023 01:28:21pm
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகையை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது. நாகை துறைமுகத்தில் இருந்து ஒரு படகில் மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் திரிகோணமலை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags :

Share via