இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சிறுவன்...கைது
சென்னையில் இளம்பெண் பாத்ரூமில் குளிப்பதை சிறுவன் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று தனது வீட்டு பாத்ரூமில், குளிக்கும் போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுவன் ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை அங்குலம் அங்குலமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்த இளம்பெண் அதிர்ச்சியில் சத்தம் போட்டுள்ளார். இதனால், சிறுவன் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
Tags :