பெருந்துறையில் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 59 பேர் கைது.

by Staff / 02-11-2023 04:30:31pm
பெருந்துறையில் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 59 பேர் கைது.

பெருந்துறையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 59 ஆசிரியர்களை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.தமிழக அரசின் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தான் ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்யப்படுவார்கள் என்பதை ஒட்டி டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் பெருந்துறையில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 59 ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, பெருந்துறை அரசு பாலிடெக்னிக் முன்பாகவும், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 37 பெண்கள் உட்பட மொத்தம் 59 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர் பின்னர் கைது செய்த அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்

 

Tags :

Share via