ரிக்ஷாவில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் வெள்ளிக்கிழமை ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடலை அவரது குடும்பத்தினர் இ-ரிக்ஷாவில் எடுத்துச் சென்றனர். ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இ-ரிக்ஷா மூலம் எடுத்துச் செல்லப்படுவதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் இல்லை என்றும், தனியார் ஆம்புலன்ஸ் நடத்துபவர்கள் அதிக தொகை கேட்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, இனியும் இதுபோல் நடக்காமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Tags :