357 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, சென்னையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை, திருட்டு வழக்கில் தொடர்புடைய இருவர் உட்பட, 12 பேரை போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதனை தொடர்ந்து நடப்பாண்டில் இதுவரை 357 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags :