வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது -6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - எஸ்.பி அதிரடி

by Admin / 14-08-2023 11:06:41am
வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது -6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - எஸ்.பி அதிரடி

திண்டுக்கல் நகர் பகுதிகளில் - வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது -6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - எஸ்.பி அதிரடி நடவடிக்கை-

திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதுகுறித்து வடக்கு காவல் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன இதனை அடுத்து *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் உத்தரவின் பேரில் நகர் டி.எஸ்.பி  கோகுலகிருஷ்ணன்* மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மனோகரன் , நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன் மற்றும் காவலர்கள்  ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்கண்ட இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் பெரிய பொன்னுமாந்துரை பகுதியை சேர்ந்தஅரவிந்த் குமார் (23)த/பெ.முருகன்   என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது -6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - எஸ்.பி அதிரடி
 

Tags :

Share via