ஐபோன் 15 மாடல் செல்போன் தயாரிப்பை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்கியது.

by Editor / 16-08-2023 02:35:33pm
ஐபோன் 15 மாடல் செல்போன் தயாரிப்பை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்கியது.

ஆப்பிள் நிறுவனத்தின் புது வரவாக வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கும் ஐபோன் 15 மாடல் செல்போன் தயாரிப்பை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. சீனாவில் ஐபோன் உற்பத்தி செய்வதில் பிரச்சனை எழுந்ததை அடுத்து இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அதன் உற்பத்தியை அந்த நிறுவனம் மாற்றியுள்ளது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலைகளில் இந்த போன்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் ஒப்பந்தத்தை டாடா நிறுவனமும் பெற்றுள்ள நிலையில், தற்போது ஃபாக்ஸ்கான் நிறுவனமும் ஐபோன் 15 மாடல்களை தயாரிக்கிறது.

 

Tags : ஐபோன் 15 மாடல் செல்போன் தயாரிப்பை ஃபாக்ஸ்கான் நிறுவனம்

Share via