காதலுக்காக இளைஞரை கொன்ற வாலிபர்

by Staff / 18-08-2023 03:52:09pm
காதலுக்காக இளைஞரை கொன்ற வாலிபர்

சூரத்தின் நன்புரா பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை இரவு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பிரியங்கா என்ற இளம்பெண்ணும் அசார் ஷேக் என்ற வாலிபரும் முன்பு காதலித்து பிரிந்தனர். பிரியங்கா தற்போது பாரத் (25) என்பவரை காதலித்து வருகிறார். இதை அவர் முன்னாள் காதலன் அசார் விரும்பவில்லை. சமீபத்தில் பிரியங்காவின் பிறந்தநாள் விழாவுக்கு வந்த பாரத்துடன் அசார் சண்டையிட்டார். பிரியங்கா பார்த்துக் கொண்டிருக்கும் போதே பாரத்தை அசார் கொடூரமாக தாக்கினார். நடுரோட்டில் வைத்து அவரை கத்தியால் குத்தி கொன்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via