கல்லூரி மாணவன் ரத்த வாந்தி எடுத்து பலி
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கடல் சார் பல்கலைகழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வந்த கடலூரை சேர்ந்த பிரசாத் என்ற இளைஞர் நேற்று ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர் மரணத்துக்கு உடற்பயிற்சி ஆசிரியர் தான் காரணம் எனக்கூறி அந்த கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :