உலகை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா

by Staff / 19-08-2023 05:27:05pm
உலகை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை ஆட்டி படைத்த கொரோனா தொற்று சில மாதங்களாக தமிழகத்தில் ஓய்வெடுத்து வருகிறது. கொரோனா தொற்று பாதித்து உலகளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில், 'பிஏ.2.86' என்ற புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து நாடுகளும் விழிப்புடன் இருக்கும்படி உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via