சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.

by Editor / 23-08-2023 09:14:58am
சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.

சேலம் அருகேயுள்ளது கன்னங்குறிச்சி எம்ஜிஆர் நகர்பகுதியைச் சார்ந்தவர் சிவராமன்(85) இவர் பெங்களூரில் விமானநிலையத்தில் பணியாற்றிஓய்வு பெற்றவர்  மனைவி வசந்தா (வயது 56) மற்றும் இரண்டாவது மகன் திலக் ( வயது 38,)  மருமகள் மகேஸ்வரி( வயது 35,) பேரன் சாய் கிறிஷ் சாந்த் (வயது 6 வயது).  குடும்பத்தோடு வசித்து வந்தார்.இந்த நிலையில் இன்று காலை சிவராமனின் மனைவி வசந்தா மயக்கத்துடன் கதவை திறந்து அக்கம் பக்கம் வசிப்பவர்களை அழைத்துள்ளார்.

பின்னர் அனைவரும் சென்று பார்த்தனர் அங்கு வீட்டுக்குள் திலக் தூக்கில் இறந்து கிடந்தார்.  சிவராமன் மற்றும் மகேஸ்வரி குழந்தை சாய் கிரிஷ் சாந்த் இறந்து கிடந்துள்ளனர்.

 உடனே இது குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீசார்  நான்குபேர் உடல்களையும் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். மேலும் மயக்கமாக உள்ள வசந்தாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.வீட்டில் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தக்கடிதத்தில் என்ன எழுதியுள்ளது என்பதனை போலீசார்  வெளியிட்டால் மட்டுமே இந்த சம்பவத்தின் காரணம் தெரியவரும்.ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.

Share via