நிலவின் தென்துருவத்தில் ’சந்திராயன்-3’-ன் விக்ரம் லேண்டர் 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்குகிறது.

by Editor / 23-08-2023 09:01:20am
நிலவின் தென்துருவத்தில் ’சந்திராயன்-3’-ன் விக்ரம் லேண்டர் 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்குகிறது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்த சந்திரயான் 3-ன் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ‘விக்ரம் லேண்டர்’ திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த, விக்ரம் லேண்டரை இன்று மாலை 6.04 மணிக்கு தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாகபணியாற்றி  வருகின்றனர். இந்தியாவின் பெருமையாக கருதப்படும் இந்த நிகழ்வைக் காண உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

’சந்திராயன்-3’-ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் காட்சி இன்று மாலை 5.20 மணி முதல் இஸ்ரோவின் இணையதளம், இஸ்ரோ முகநூல் பக்கம் மற்றும் அரசு தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி விக்ரம் லேண்டர், நிலவை 70 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

 

Tags : ’சந்திராயன்-3’-ன் விக்ரம் லேண்டர்

Share via