வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

by Staff / 23-08-2023 05:27:34pm
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

IPC, CrPC, எவிடன்ஸ் சட்டம் மாற்றம் செய்யும் நடவடிக்கையை கண்டித்து கோவையில் இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம். IPC, IrPC, மற்றும் எவிடன்ஸ் சட்டத்தை மாற்றம் செய்து குற்றவியல் சட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பல்வேறு வழக்கறிஞர்கள், மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவாயில் முன்பு வழக்கறிஞர்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு குற்றவியல் சட்டத்தை கொண்டு வர கூடாது, எனவும் இச்சட்டத்தை ஏற்க மாட்டோம் எனவும் வடமாநில சட்டங்களை திரும்ப பெறு எனவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கே எம் தண்டபாணி கூறுகையில், மத்திய அரசு கொண்டுவரும் இந்த திருத்தச் சட்டங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கின்ற வகையில் உள்ளது என தெரிவித்தனர்.

 

Tags :

Share via