புழல் சிறையில் வெளிநாட்டு கைதிகளிடம் 5 கைப்பேசிகள் பறிமுதல்

by Staff / 24-08-2023 12:17:55pm
புழல் சிறையில் வெளிநாட்டு கைதிகளிடம் 5 கைப்பேசிகள் பறிமுதல்

சென்னை புழல் சிறையில் வெளிநாட்டு கைதிகளிடமிருந்து 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. புழல் சிறை வளாகத்தில் உள்ள மத்திய சிறை 1-இல் வெளிநாட்டு கைதிகளை அடைத்து வைத்திருக்கும் பகுதியில் சில கைதிகள் கைப்பேசி பயன்படுத்துவதாக சிறைத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் சிறைத் துறையின் அதிவிரைவுப்படையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது நைஜீரியாவைச் சோந்த கைதிகள் இ. இசோபா அகஸ்டின் சிபைக் (41), தை. அயூலூவா டேவிட் அடிபேகின் (22), கொழும்புவைச் சோந்த கைதி கா. எட்வின் என்ரிக் (38), சென்னை எா்ணாவூா் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சோந்த கைதி ஜா. ரகுமான் (32) ஆகிய 4 போகளிடமிருந்து 5 கைப்பேசிகள், 5 பேட்டரிகள், சாா்ஜா்கள், சிம்காா்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக, சிறைத் துறையின் சாா்பில் புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

Tags :

Share via