பணம் வைத்து சூதாட்டம் - 6 பேர் கைது

by Staff / 10-10-2023 01:27:30pm
பணம் வைத்து சூதாட்டம் - 6 பேர் கைது

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே குருத்தூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு ரோந்து சென்ற போலீசார் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்த ஒத்தக்கடை போலீசார் அவர்களிடம் இருந்து ஆறு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via