திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை 3 பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.

by Editor / 09-08-2022 11:47:48am
திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை 3 பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு போலீசார்  வலைவீச்சு.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் ஜெ 
 ஜெ நகர் பகுதியில் வசித்து வந்த திமுக உறுப்பினர் மோகன் நேற்று இரவு அவரது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருத்தணி சட்ட ஒழுங்கு போலீசார் சிசிடி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via