விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம்-ராகுல்காந்தி

by Editor / 13-04-2024 12:14:10am
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம்-ராகுல்காந்தி

தேர்தல் பரப்புரைப்பாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்த ராகுல்காந்தி  திருநெல்வேலியில் காலை காங்கிரஸ் உள்ளிட்ட  கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் பின்னர் அவர் பேசியதாவது:

தமிழ் மொழி மீது தொடுக்கப்படும் தாக்குதல் தமிழர்கள். மீதான தாக்குதலாகவே நான் கருதுகிறேன். தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இல்லாமல் இந்தியா இல்லை.ஏழை விவசாயிகள் கடனை தள்ளூபடி செய்யாத மோடி, பெரிய நிறிசனங்களுல்கு ஒன்றரை லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கிறார். 

நாட்டின் சிறு,குறு தொழில்கள் அனைத்யும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சீரஈந்துள்ளது. ஐ.டி., சி.பி.ஐ., இ.டி என அனைத்தும் அரசின் கையில் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்ட பயன்படுத்தப்படுகின்றனர். நாட்டின் 3,4 பெரிய முதலாளிகளுக்காகவே மத்திய அரசு செயல்படுகிறது.

இந்தியா முழுவதும் 30 லட்சம் வேலையிடங்கள் காலியாக உள்ள்ன. நாங்கள் ஆட்சிக்கி வந்ததும் அந்த காலியிடங்களை உடனடியாக நிரப்புவோம். வேலை கிடைக்கும் முன்பாக தனியார் நிறுவனத்தில் 6 மாதம் பயிற்சி பெற்ற பின்னர் அரசு வேலை கிடைக்கச் செய்வோம்.  இதற்காக வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும். பயிற்சி காலத்தில் அரசு ஓராண்டுக்கு ஒரு லசட்ம் ரூபாய் கொடுக்கப்படும் இதன் மூலம் வேலை வாய்ப்புக்கான பயிற்சியும் சம்பாதிக்கும் வழியும் கிடைக்கும். 
நீட் தேர்வு ஏழை மக்களுக்கு எதிரானது. அதனால் அதற்கான முடிவை அந்தந்த மாநிலங்களே எடுத்துக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு அவர்களின் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும். நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் நாங்கள் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம். நாட்டில் வறுமின் பிடியில் இருக்கும் அத்தனை ஏழைப் பெண்களும் பயன்பெறும் வகையில் குடும்பத்தின் ஒது பெண்ணுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ருபாய் கொடுப்வோம். அதன் மூலம் வறுமையை நிரந்தரமாக ஒழிக்கப்படும். பெண்களுக்கு அரசு வேலைகளிலும் நாடாளுமன்றம், சட்டமன்றத்திலும் 50 சதவிகித இடஒதுக்கீடு கொடுப்போம்.

மோடி அரசு மீனவர்களை முழுனையாக மற்ந்துவிட்டது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்காலை செயல்படுத்துவோம். தற்வோது நடப்பது ஒரு பண்பாட்டு யுத்தம். பண்பாட்டையும் உங்கள் கலாச்சாரத்தையும் பாதுகாக்க நானும் காங்கிரஸும் துணைப்நிற்போம். மோடி மட்டுமல்ல இந்த உலகின் எந்த சக்தியும் உங்களைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது. நடக்கும் யத்துவார்த்த போதில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

 

Tags : விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம்.

Share via