கல்லூரியில் அடித்துக்கொண்ட மாணவர்கள் காவல்துறையினர் தீவிர விசாரணை

by Staff / 24-08-2023 02:29:29pm
கல்லூரியில் அடித்துக்கொண்ட மாணவர்கள் காவல்துறையினர் தீவிர விசாரணை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவி வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை முதலாமாண்டு பயிலும் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பினருக்கு இடையே, முன்விரோதம் காரணமாக ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த  காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via