மிசோரத்தில் இறந்தவர்கள் மேற்குவங்க தொழிலாளர்கள்
மிசோரமில் கட்டுமானப் பணியில் இருந்த ரயில்வே மேம்பாலம் நேற்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஐஸ்வாலில் இருந்து 21 கிமீ தொலைவில் உள்ள குருங் ஆற்றின் மீது ரயில் பாலம் இடிந்து விழுந்தது. இதுவரை 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த மூவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 5 பேரின் உடல்கள் கிடைக்கவில்லை. அவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.
Tags :