ஆற்றில் கவிழ்ந்த டிராக்டர்... 9 பேர் பலி

by Staff / 24-08-2023 05:28:51pm
ஆற்றில் கவிழ்ந்த டிராக்டர்... 9 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை 50 பக்தர்களுடன் சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழந்தது. இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via