தலைமை செயலக கட்டிடத்தில் இருந்து குதித்த விவசாயிகள்
வார்தா மேல் அணைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகள், மும்பையில் உள்ள மகாராஷ்டிரா அரசின் தலைமை செயலக கட்டிடமான மந்திராலயாவில் உள்ள ஆறாவது மாடியில் இருந்து குதித்தனர். நல்வாய்ப்பாக இவர்கள் முதலாவது மாடியில் இருந்து தற்கொலை தடுப்பு வலைகளில் விழுந்தனர். பின் அதில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
Tags :