செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

by Staff / 30-08-2023 04:54:21pm
செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி


செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொண்டனர். 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை குண்டாற்று கரையில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அக்கசாலை விநாயகர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் வைத்து, விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

விஸ்வகர்மா சமுதாயத் தலைவர்  சுப்ரமணியன் தலைமையில், செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர் ஐயப்பன்  முன்னிலையில் நடந்த பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் மகேஸ்வர சர்மா கலந்து கொண்டு நடத்தி வைத்தார். இதில் ஏராளமான விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, வேதமந்திரங்களை பாராயணத்துடன் பின்பற்றி பூணூல் மாற்றிக்கொண்டனர்.

 

Tags :

Share via