சிறுமியை பலாத்காரம் செய்து கருக்கலைப்பு; இளைஞர் கைது
திருவனந்தபுரம் பேரூர்கடை பகுதியில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார். கூர்க்கன்கோணத்தைச் சேர்ந்த சித்தார்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். சிறுமி பருவமடைவதற்கு முன்பே பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கருக்கலைப்பு செய்ய மாத்திரைகள் கொடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags :