பிரபல ரவுடி கொலை வழக்கு அ. தி. மு. க. , பிரமுகர்கள் கைது

by Staff / 04-09-2023 04:48:58pm
பிரபல ரவுடி கொலை வழக்கு அ. தி. மு. க. , பிரமுகர்கள் கைது

சென்னை, புளியந்தோப்பு, நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ், 49. பிரபல ரவுடியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன், பட்டினம்பாக்கத்தில் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, ஜோதி மணி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி ரவுடிகள் நான்கு பேர், திருநெல்வேலி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். நேற்று, ஆற்காடு சுரேஷ் கொலை தொடர்பாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த அ. தி. மு. க. , பிரமுகர் கென்னடி, சுதாகர் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via