வ.உ.சிதம்பரனாருக்கு தமிழக அரசு மரியாதை

by Staff / 05-09-2023 04:29:38pm
வ.உ.சிதம்பரனாருக்கு தமிழக அரசு மரியாதை

செக்கிழுத்த செம்மல் சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வ.உ.சி படத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இது பற்றி ட்வீட் செய்துள்ள முதல்வர், ஆங்கிலேயருக்குச் சவால் விடும் வகையில் கப்பல் விட்டதும், விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறையில் செக்கிழுத்ததும் வ.உ.சிதம்பரனாரின் உணர்ச்சிமிகு வரலாறு. அத்தகைய பேராளுமையின் அனைத்துப் பரிமாணங்களையும் அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம். பல முயற்சிகளின் வழியே இந்தியா மொத்தமும் அவர் தியாகத்தையும், பெரும்புலமையையும் அறியச் செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via