முன்னாள் முதலமைச்சர் சுப்பராயன் சிலை திறப்பு

by Staff / 05-09-2023 04:27:31pm
முன்னாள் முதலமைச்சர் சுப்பராயன் சிலை திறப்பு

தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.ப. சுப்பராயனுக்கு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது பற்றி ட்வீட் செய்துள்ள முதலமைச்சர், 1920-ஆம் திராவிட இயக்கத்தின் தாய்க்கட்சியான நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை பதவியேற்றபோது, முதலமைச்சராக ஆனவர் கடலூர் சுப்பராயன் அவர்கள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடக்கக் கல்வி மன்றம் ஏற்படுத்திக் கல்விப் புரட்சிக்கு விதையூன்றியவர் என புகழாரம் சூட்டியுள்ளளார்.

 

Tags :

Share via