அரசு மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு

by Staff / 10-11-2023 01:12:41pm
அரசு மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு

தீபாவளியின்போது நேரிடும் பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அதைக்கருத்தில் கொண்டு குழந்தைகளைப் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கச் செய்தல் அவசியம். அதுபோல பண்டிகை நேரங்களில் சாலை விபத்துகள் நேரிடும்போது அதையும் எதிர்கொண்டு மருத்துவ சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Tags :

Share via