இடஒதுக்கீடு குறித்து மோகன் பகவத் கருத்து

by Staff / 07-09-2023 12:10:14pm
இடஒதுக்கீடு குறித்து மோகன் பகவத் கருத்து

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இடஒதுக்கீடு குறித்து முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்திய சமூகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான பாகுபாடு இன்னும் தொடர்கிறது. எனவே, ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று கூறினார். அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை ஆர்எஸ்எஸ் முழுமையாக ஆதரிக்கிறது. சில சமூகங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளாக பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளன என்றார். சனாதன தர்மம் பற்றிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் இடஒதுக்கீடு பற்றி பேசியுள்ளார்.

 

Tags :

Share via