மக்களை நேரில்சந்தித்து மாஸ்காட்டும்  சாண்டி உம்மன்.

by Editor / 09-09-2023 11:56:51pm
மக்களை நேரில்சந்தித்து மாஸ்காட்டும்  சாண்டி உம்மன்.

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் அபார வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 80,144 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜெய்க் சி தோமஸ் 42,425 வாக்குகளும், பாஜக வேட்பாளர் லிஜின் லால் 6,558 வாக்குகளும் பெற்றனர். இந்த நிலையில் தன்னை அமோக வெற்றி பெறச் செய்த புதுப்பள்ளி சட்டமன்றத்தொகுதியின்  மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 26 கி.மீ., நடந்து சென்று மக்களை சந்தித்து சாண்டி உம்மன் நன்றி தெரிவித்தார்.அவரின் இந்த செயல் கேரளாசமூக வலைத்தளங்களில் வேகமாக அதிகளவில் பரவி வருகிறது.

 

Tags : Sandy Oomman is the son of former Chief Minister Oomman Sandy

Share via