சென்னையில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நடைபயிற்சி

by Staff / 11-09-2023 01:20:31pm
சென்னையில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நடைபயிற்சி

உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி சென்னையில் நேற்று விழிப்புணர்வு நடைபயிற்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் செப். 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ‘சிநேகா’ என்ற தற்கொலை தடுப்பு அமைப்பு சார்பில் சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் இருந்து, 3 கி. மீ. தொலைவுக்கு நேற்று விழிப்புணர்வு நடைபயிற்சி நடைபெற்றது.இதில், கல்லூரி மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என 2 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். நடிகர் சித்தார்த் நடைபயிற்சியைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
 

 

Tags :

Share via