கைதியின் மனைவியுடன் வீடியோகாலில் பேசிய வார்டன் சஸ்பெண்ட்

by Staff / 12-09-2023 11:33:43am
கைதியின் மனைவியுடன் வீடியோகாலில் பேசிய வார்டன் சஸ்பெண்ட்

நாமக்கல்லைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் திருட்டு வழக்கில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக மனைவி முருகேஷ்வரி அடிக்கடி சிறைக்கு வந்துள்ளார். அப்போது சிறை வார்டன் விஜயகாந்துடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முருகேஷ்வரியின் செல்போனுக்கு வீடியோகாலில் அடிக்கடி அழைத்து பாலியல் ரீதியாக பேசி தொந்தரவு அளித்துள்ளார். இதுபற்றி அப்பெண் சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்த நிலையில், விஜயகாந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

Tags :

Share via