கார் மோதி சம்பவ இடத்தில் பலியானார்..

by Admin / 12-09-2023 11:46:42pm
 கார் மோதி சம்பவ இடத்தில் பலியானார்..

வடமதுரை அருகே கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர். பலி வடமதுரை அருகே உடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கணேசன் ( வயது 65 )இவரின் மனைவி பெயர் ராஜாமணி இவருக்கு மகள்கள் இரண்டு பேர் மகன் ஒருவர் உள்ளனர். கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார் ...இவர் இன்று காலை தனது கிராமத்தில் இருந்து வடமதுரை நகரத்திற்கு செல்வதற்காக திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது வடமதுரை மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு சற்று முன்பு சேலம் கிச்சிபாளையம் என்ற இடத்தைச் சேர்ந்த கலைவேந்தன் வயது 36 என்பவர் ஓட்டி வந்த கார் மோதி சம்பவ இடத்தில் பலியானார்..

காரில் வந்த கலைவேந்தன் மற்றும் அவர் மனைவி இருவரும் சேலத்தில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு சென்று விட்டு அதன் திருச்சி வயலூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது..சம்பவ இடத்திற்கு விரைந்த வடமதுரை சப் இன்ஸ்பெக்டர் அங்கமுத்து பிரேதத்தை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்..

 

Tags :

Share via