பட்டா வழங்க ரூ. 2,500 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் ராமகிருஷ்ணன்(36). இவர், பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான காலி மனைக்கு பட்டா வழங்க கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார்.இதைத்தொடர்ந்து, ராமகிருஷ்ணன் அகரம்சீகூர் கிராம வி. ஏ. ஓ. , வான சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த ராஜூ மகன் பிரகாஷ், 29, என்பவரை அணுகினார். அவர், பட்டா வழங்க தனக்கு 3,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டார். பின்னர் 2,500 ரூபாய்க்கு வேலையை முடித்து தர ஒப்புக்கொண்டார்.லஞ்சம் தர விரும்பாத ராமகிருஷ்ணன் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ராமகிருஷ்ணன் வி. ஏ. ஓ. , பிரகாஷிடம் 2, 500 ரூபாய் லஞ்சமாக கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பிரகாஷை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Tags :